Wednesday 26 December 2012

நிலம் வாங்குவதற்கு முன் நிலத்தை பற்றி தெரிந்துகொள்ளவேண்டிய முழு விவரங்கள்:

நிலம் வாங்குவதற்கு முன் அதைப் பற்றி முழு விவரங்கள் தெரிந்து கொள்ள
வேண்டும். அதோடு நிலம் வாங்கும் முறை, அதைப் பாதுகாக்கும் முறைகள்
பற்றியும் தெரிந்து கொள்வது நல்லது. பொதுவாக மக்களுக்கு நிலம் வாங்கும்
போதும், விற்கும் போதும் என்னென்ன ஆவணங்கள் சரிபார்க்க வேண்டும் அது தமிழ் நாடு அரசின் எந்தெந்த துறைகளின் கீழ் வருகிறது என்பது போன்ற
விவரங்கள் தெரிவதில்லை. நிலத்தை வாங்கும் போது ஆவணங்களைச் சரிபார்ப்பது மிகக் கடினமான ஒன்றாக கருதப்படுகிறது. அதைப் பற்றிய முழு விவரங்கள் தெரிந்து கொண்டால் அடிப்படையான விஷயங்களை நாமே ஆவணங்களைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
அதற்கு முன் சொத்தின் அடிப்படை விஷயமான புல எண் (Survey Number) என்பது என்ன என்று தெரிந்து கொள்வோம்.


how-to-buy-properties


புல எண் (Survey Number) :

ஒவ்வொரு மாவட்டமும் பல வட்டங்களாகவும் (Taluk), வட்டங்கள் பல
கிராமங்களாகவும் பிரிக்கப்பட்டிருக்கும். கிராமங்களின் கீழ் நிலங்கள் பல
பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு இலக்கம் இடப்படும்.
அதற்குப் புல எண் (survey Number) என்று பெயர்.

நிலம் தொடர்பான விவரங்கள் இருதுறைகளில் பராமரிக்கப்படுகின்றன.
1. பதிவுத்துறை
2. வருவாய்த்துறை
அதைப் பற்றி சுருக்கமாக காண்போம்

1. பதிவுத்துறை :
நாம் சொத்து வாங்கும் போது அல்லது விற்கும் போது அந்தக் கிரயப்
பத்திரத்தை (Sale Deed) சார்பதிவாளர் (Sub- Registration Office)
அலுவலகத்தில் தான் பதிவு செய்ய வேண்டும்.

2. வருவாய்த்துறை :
இந்த துறையில்தான் நிலத்திற்கான விவரங்கள் கீழ்க்கண்ட பதிவேட்டில் இருக்கும்.
பட்டா (Patta)
சிட்டா (Chitta)
அடங்கல் (Adangal)
அ' பதிவேடு ('A' Register)
நிலத்திற்கான வரைபட எல்லை (FMB)
பட்டா (Patta) :
நிலத்தின் உரிமை நமக்கு தான் இருக்கிறது என்பதற்கான ஆதாரம் பட்டாவாகும்.
பட்டாவை வைத்துதான் ஒரு நிலத்தின் உரிமை யாருக்கு என்பதை முடிவு
செய்யப்படுகின்றது. பின்வரும் விவரங்கள் பட்டாவில் இருக்கும் :-
1. மாவட்டத்தின் பெயர், வட்டத்தின் பெயர் மற்றும் கிராமத்தின் பெயர்
2. பட்டா எண்
3. உரிமையாளர் பெயர்
4. புல எண்ணும் உட்பிரிவும் (Survey Number and Subdivision)
5. நன்செய் நிலமா அல்லது புன்செய் நிலமா
6. நிலத்தின் பரப்பு மற்றும் தீர்வை

சிட்டா (Chitta) :
ஒரு தனி நபருக்குக் குறிப்பிட்ட கிராமத்தில் எவ்வளவு நிலம்
இருக்கிறதென்று அரசாங்கம் வைத்திருக்கும் பதிவேடு. இதில் சொத்தின்
உரிமையாளர் பெயர், பட்டா எண்கள், நிலம் நன்செய் அல்லது புன்செய்
பயன்பாடு, தீர்வை கட்டிய விவரங்கள் எல்லாம் இருக்கும்.

அடங்கல் (Adangal) :
ஒரு கிராமத்தில் இருக்கிற மொத்த சர்வே எண்கள் அடங்கிய பதிவேடு. இதில்
குறிப்பிட்ட சர்வே எண்ணுக்கு உரிய நிலம் யார் பெயரில் இருக்கிறது, பட்டா
எண் மற்றும் நிலத்தின் பயன்பாடு என்பன போன்ற விவரங்கள் இதில் இருக்கும்.

அ' பதிவேடு ('A' Register) :

இப்பதிவேட்டில்

1. பழைய நில அளவை எண், உட்பிரிவு எண், (Survey Number and Subdivision)
2. ரயத்துவாரி(ர), சர்க்கார் (ச), அல்லது இனாம் (இ),
3. நன்செய் (ந), புன்செய் (பு), மானாவாரி (மா), தீர்வு ஏற்படாத தரிசு
(தீ.ஏ.த), புறம்போக்கு,
4. பட்டா எண் மற்றும் பதிவு பெற்ற உடைமையாளரின் பெயர்,
5. நிலத்தின் பரப்பு மற்றும் தீர்வை, போன்ற விவரங்கள் இருக்கும்.

நிலத்திற்கான வரைபட எல்லை (FMB) :
நிலத்திற்கான வரைபடம். இது இடம் எவ்வாறு பல பகுதிகளாக
பிரிக்கப்பட்டுள்ளது என்பதைக் காட்டுகிறது .

கிரயப் பத்திரம் (Sale Deed) :
சொத்து வாங்கும் போது அல்லது விற்கும் போது அந்தக் கிரயப் பத்திரத்தைச்
சார் பதிவாளர் அலுவலகத்தில் (Sub- Registration office) பதிவு செய்ய
வேண்டும். கிரயப் பத்திரத்தில் கீழ்க்கண்ட முக்கியமான விவரங்கள்
இருக்கும்.

1. எழுதிக் கொடுப்பவரின் பெயர், முகவரி
2. எழுதி வாங்குபவரின் பெயர், முகவரி
3. எவ்வளவு அளவு
4. எவ்வளவு தொகைக்கு விற்கப்படுகிறது
5. சொத்து விவரம்

சொத்து விவரத்தில் நாம் வாங்கும் நிலத்தின் அளவு, அது எந்தப் புல எண்ணில்
அமைந்திருக்கிறது, பட்டா எண், அது எந்தக் கிராமத்தில் இருக்கிறது மற்றும்
வட்டம், மாவட்டம் பற்றிய விவரங்கள் இருக்கும். நிலம் வீட்டு மனையாக
இருந்தால் அதனுடைய அங்கீகாரம் பெற்ற விவரங்கள் மற்றும் பிளாட் எண்
முதலியவை இருக்கும்.

property


கிரயப் பத்திர முதல் தாளின் பின் பக்கம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட முழு விவரங்கள் இருக்கும்.

1. பதிவு எண் மற்றும் வருடம்
2. சொத்து எழுதிக் கொடுப்பவரின் புகைப்படம், கைரேகை, கையெழுத்து, முகவரி
3. சொத்து எழுதி வாங்குபவரின் புகைப்படம், கைரேகை, கையெழுத்து, முகவரி
4.புகைப்படங்களில் சார் பதிவாளரின் கையொப்பம்
5. பதிவு செய்யப்பட்ட நாள், விவரம், பதிவு கட்டணம் செலுத்திய விவரம்
சார்பதிவாளர் அலுவலகத்தின், விவரம் ஆகியவை
6. இரண்டு சாட்சிகளின் கையொப்பம் மற்றும் முகவரி
7. மொத்தம் எத்தனை பக்கங்கள்
8. மொத்தம் எத்தனை தாள்கள்
9. தமிழ்நாடு அரசின் ஸ்டிக்கர்.

Land document

01.07.06 முதல்தான் கிரயப் பத்திரத்தில் சொத்து விற்பவர் மற்றும்
வாங்குபவர்களின் புகைப்படங்கள் ஒட்டும் முறை அரசால் நடைமுறைப்
படுத்தப்பட்டது. சொத்து வாங்குபவர் புகைப்படம் இரண்டும் சொத்து
விற்பவரின் புகைப்படம் ஒன்று ஒட்டப்பட்டு இருக்கும். இதற்கு முன் பதிவு
செய்யப்பட்ட ஆவணங்களில் புகைப்படங்கள் இருக்காது. 18.05.09 முதல் இந்த
முறையிலும் மாற்றம் செய்யப்பட்டு சொத்து வாங்குபவரின் புகைப்படம்
இரண்டிற்குப் பதிலாக ஒன்று ஒட்டினால் போதும் என்ற முறை நடைமுறைக்கு வந்தது.

Chennai-Builder


இது தவிர ஒவ்வொரு தாளின் இரு பக்கமும் இந்தக் கிரயப் பத்திரம் மொத்தம் எத்தனை பக்கங்கள் (Sheet) கொண்டது மற்றும் அந்தப் பக்கத்தின் எண், ஆவண எண், வருடம் போன்ற விவரங்கள் சார்பதிவாளர் அலுவலகத்தினரால் குறிக்கப்பட்டிருக்கும்.ஒவ்வொருதாளின் பின்புறமும் இந்தக் கிரயப் பத்திரம் எத்தனை தாள்களைக் கொண்டது. அந்த தாளின் நம்பர், ஆவண எண், வருடம் முதலியவை குறிக்கப்பட்டு சார்பதிவாளர் கையொப்பம் இருக்கும்.

நாம் பதிவு விவரங்கள் முத்திரைத் தாள்களில் டைப் செய்யும் போது அதன் முன்பக்கம் மட்டும் தான் டைப் செய்ய வேண்டும். ஒவ்வொரு பக்கத்திற்கும் 1ல் இருந்து ஆரம்பித்து வரிசையாக இலக்கம் இடப்படும்.. அதனால் தாள்களின் எண்ணிக்கையும் பக்கமும் சமமாக இருக்கும். எடுத்துக்காட்டாக 16 முத்திரைத் தாள்களில் டைப் செய்தால் 16 பக்கங்கள் இருக்கும். ஆனால் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யும் போது பதிவின் விவரங்கள் அனைத்தும் முதல் தாளின் பின்புறம் குறிக்கப்பட்டிருக்கும்.

சார்பதிவாளர் அலுவலகத்தில் இதையும் ஒரு பக்கமாக கணக்கில் எடுத்துக் கொண்டு இலக்கம் கொடுப்பரார்கள். அதனால் மொத்தம் 16 தாள்கள்தான் இருக்கும். ஆனால் பக்கங்கள் மட்டும் 17 ஆகிவிடும்.

பதிவு செய்யும் முறை:

நாம் வாங்கும் இடம் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட புல எண்களில்
அமைந்திருக்கலாம். ஒவ்வொரு புல எண்ணிற்கும் அது அமைந்திருக்கும் இடத்தை பொறுத்து அரசாங்கம் மதிப்பீடு செய்து ஒரு விலை நிர்ணயம் செய்யும். அதற்கு பெயர் Guide line value .
நாம் பத்திரம் பதிவு செய்யும் போது இந்த பெயர் Guide line valueக்கு 8% முத்திரை தாள்களாக வாங்கி அதில் கிரயப் பத்திரத்தின் விவரங்கள் டைப் செய்து சார்பதிவாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்ய வேண்டும். முழு மதிப்பிற்கும் (8%) முத்திரைத்தாள்கள் வாங்க முடியாத நிலையில், ஏதாவது ஒரு மதிப்பிற்கு முத்திரைத் தாள் வாங்கிவிட்டு மீதி தொகையை சார்பதிவாளர் அலுவலகத்தில் செலுத்தலாம்.

இதற்கு 41 என்ற படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும். அதில் வாங்க வேண்டிய முத்திரைத் தாள்களின் மதிப்பு, நாம் வாங்கிய முத்திரைத் தாளின் மதிப்பு,, மீதி செலுத்த வேண்டிய தொகை முதலிய விவரங்களை பூர்த்தி செய்து கிரயப் பத்திரத்துடன் இணைத்து சார்பதிவாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்ய வேண்டும். மீதி செலுத்த வேண்டிய தொகை ரூபாய் ஆயிரம் வரை இருந்தால் பணமாக செலுத்தி விடலாம். அதற்கு மேல் இருக்கும் பட்சத்தில் காசோலையாக (Demand Draft) செலுத்த வேண்டும். காசோலை யார் பெயரில் எடுக்க வேண்டும் என்ற விவரம் அந்தந்த சார்பதிவாளர் அலுவலகத் தகவல் பலகையில் குறிக்கப்பட்டிருக்கும்.

பதிவுக் கட்டணமாக Guide line valueவில் இருந்து (1%) மற்றும் கணினி கட்டணம் ரூபாய் 100ம் பதிவு செய்யப்படும் போது சார்பதிவாளர் அலுவலகத்தில் செலுத்த வேண்டும். இதுவும் ரூபாய் ஆயிரம் வரையில் பணமாகவும் அதற்கு மேல் காசோலையாகவும் செலுத்த வேண்டும்.

Bangalore-Builder


முத்திரைத் தாள்களில் கிரயப் பத்திர விவரங்கள் டைப் செய்து, ஒவ்வொரு பக்கத்திலும் கீழ்பகுதியில் ஒரு புறம் சொத்து வாங்குபவரும் மறுபுறம் சொத்து விற்பவரும் கையொழுத்து இட வேண்டும். பின்பு சார்பதிவாளரிடம் இந்தக் கிரயப் பத்திரத்தைப் பதிவு செய்வதற்காக தாக்கல் செய்ய வேண்டும்.

சார்பதிவாளர், சொத்து வாங்குபவர் மற்றும் விற்பவரின் புகைப்படம், அடையாள அட்டை முதலியவைகளையும், மற்ற எல்லா விவரங்களையும் சரி பார்த்து விட்டு கிரயப் பத்திரத்திற்குப் பதிவு இலக்கம் கொடுப்பார். நாம் செலுத்த வேண்டிய பதிவுக் கட்டணத்தைச் செலுத்திய பின் நிலம் விற்பவர் மற்றும் வாங்குபவரின் புகைப்படங்கள் முதல் முத்திரைத் தாளின் பின்புறம் ஒட்டப்பட்டு அவர்களுடைய கையொப்பம், முகவரி, கைரேகை முதலியவை வாங்கப்படும். புகைப்படங்களின் மேல் சார்பதிவாளர் கையொப்பம் இடுவார். சாட்சிகள் கையொப்பமிடுவர் இத்துடன் பதிவு நிறைவு பெறும்.

பதிவுக் கட்டணம் செலுத்திய இரசீதில், சார்பதிவாளர் மற்றும் சொத்து வாங்குபவர் கையொப்பம் இட வேண்டும். சொத்து வாங்குபவர் பதிவு செய்யப்பட்ட பத்திரத்தைக் குறிப்பிட்ட சில நாட்களுக்குப் பிறகு, இந்த இரசீதைக் காட்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் சென்று பெற்றுக் கொள்ளலாம். அவரைத் தவிர வேறு யாராவது சென்று வாங்க வேண்டியதிருந்தால், இரசீதில் அந்த நபரும் கையொப்பமிட வேண்டும்.

Ahmedabad-Builder


பத்திரப்பதிவின் போது Guide line value-விற்கு 8% முத்திரைதாள் வாங்க
வேண்டும். அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட Guide line value அதிகமாக
இருக்கிறது என எண்ணும் பட்சத்தில் நாமே சொத்திற்கு ஒரு மதிப்பு நிர்ணயம் செய்து அந்த மதிப்பிற்கு 8% முத்திரைத்தாள் வாங்க வேண்டும். அதை சார்பதிவாளர் பதிவு செய்து விட்டு pending document என முத்திரை இட்டு விடுவார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்(Collector office) இதற்கென்று ஒரு பிரிவு இருக்கிறது. அங்கிருந்து அரசாங்க அலுவலர் ஒருவர் வந்து இடத்தை பார்வையிட்டு, அதைச் சுற்றி உள்ள சர்வே எண்களின் மதிப்பை வைத்து Guide line value சரியானதா என்பதை முடிவு செய்வார். அல்லது அவரே ஒரு மதிப்பை நிர்ணயம் செய்வார்.

Guide line value சரியாக இருக்கிறது என்று அவர் முடிவு செய்யும் பட்சத்தில் Guide line value-விற்கும் நாம் நிர்ணயித்த
மதிப்பிற்கும் உள்ள வித்தியாசத் தொகையில் 8% பணமாக கட்ட வேண்டும் அல்லது அவர் நிர்ணயம் செய்த மதிப்பிற்கும், நாம் நிர்ணயம் செய்த மதிப்பிப்ற்கும் உள்ள வித்தியாசத் தொகையில் 8% பணமாக கட்ட வேண்டும். அப்பொழுது தான் நாம் பதிவு செய்த document நம்மிடம் ஒப்படைக்கப்படும். இந்த முறை 47A பிரிவு என்பதாகும். ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் மீதி தொகையை சார்பதிவாளர் அலுவலகத்தில் செலுத்தி பத்திரத்தைப் பெற வேண்டும். இல்லை என்றால் அது அந்த மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பப்படும். நாம் அங்கு சென்று அந்த வித்தியாசத் தொகையை செலுத்தி பெற்று கொள்ளலாம்.

Thursday 7 June 2012

குர்கான் மற்றும் நொய்டா ரியல் எஸ்டேட்

ரியல் எஸ்டேட் வளர்ச்சியையும் குர்கான் மற்றும் நொய்டா காரணமாக டெல்லி புதிய மற்றும் தரம் மிக்க குடியிருப்பு, சில்லறை வியாபார மற்றும் அலுவலக வளர்ச்சிகள் தொடங்கியுள்ளது.

குர்க்கான்

பெரிய நிறுவனங்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் ஈர்ப்பதற்காக மிக முக்கியமான காரணிகள் அவுட்சோர்சிங் மற்றும் உயர் வருவாய், இதன் அடிப்படை காரணமாக குடியிருப்பு மேம்பாட்டு ஒன்றை உருவாக்குகிறது. குடியிருப்பு மற்றும் வர்த்தக வளர்ச்சி ஒரு நவநாகரிக இங்கு வகுக்கிறது .

டெல்லி அருகில் குர்க்கான் மற்றும் நொய்டா

டெல்லி மற்றும் காஸியாபாத் சிறந்த திட்டமிடப்பட்ட நகரங்களில் ஒன்றாகும்.போதுமான மின்சாரம் மற்றும் நல்ல போக்குவரத்து இணைப்பு மிக்க பகுதியாக குர்கான் காணப்படுவதால் , குடியிருப்பு ரியல் எஸ்டேட் விரிவடைந்து வருகின்றன.குர்க்கான் குடியிருப்பு மற்றும் வர்த்தக அலுவலகம் வழிவகுக்கின்றது .இப்போது இங்கு பள்ளி ,கல்லூரி விளைவாக அதிவேகமான வளர்ச்சி கண்டுவருகிறது.


டெல்லி மற்றும் ராஜஸ்தான், ஹரியானா மூலோபாய விமான நிலையம் மற்றும் சிறந்த சாலை இணைப்புகள் டெல்லி அதன் எல்லைகளை விரிவடைய -குர்க்கான் எக்ஸ்பிரஸ்வே தேசிய நெடுஞ்சாலை 8 அமைந்துள்ளது. நான்கு புதிய சாலை இணைப்புகள் மேற்கு பரிதாபாத், சோனெபட், நொய்டா மற்றும் இணைக்கும் காஸியாபாத் குர்க்கான் விரைவுப்பாதை பட்டறை உள்ளன. மெட்ரோ ரயில் இணைப்பு குர்க்கான் டெல்லி இணைக்கிறது.

மாநில அரசாங்கத்தில் அறிவு சார்ந்த தொழில்கள் வளர்ச்சி அலுவலக இடம் மற்றும் குடியிருப்பு பண்புகள் தேவை உருவாக்கின்றது . தொழில்துறை மற்றும் பிபிஓ துறைகளில் வளர்ச்சி குர்க்கான் ரியல் எஸ்டேட் விரிவான திட்டங்களை வழி வகுக்கிறது .

நொய்டா

ஆசியாவில் நொய்டா மிகப்பெரிய திட்டமிட்ட தொழில்துறை,குடியிருப்புகளில் ஒன்றாகும்.குறிப்பாக கிரேட்டர் நொய்டா, காட்ஜியபாத், கிரேட்டர் நொய்டா, குர்கான், ஃபரிதாபாத் மற்றும் சோனெபட் முன்மொழியப்பட்ட அனைத்து நகரங்களையும் மெட்ரோ ரயில் இணைப்பு கொண்ட, ஆக்ரா மற்றும் டெல்லி கொண்ட கிரேட்டர் நொய்டா தாஜ் எக்ஸ்பிரஸ்வே மூலம் இயங்குவதால் , உண்மையான உலக வர்த்தக உள்கட்டமைப்பு தொகுப்பை உருவாக்கபடுகிறது.


நொய்டா சொத்து விகிதம் கடந்த மூன்று ஆண்டுகளாக நல்ல வளர்ச்சியை கண்டுள்ளது கிரேட்டர் நொய்டா, இங்கு பள்ளிகள், மருத்துவமனைகள், பூங்காக்கள் மற்றும் பிற வசதிகள் கட்டமைப்பு ஆதரவை உறுதி செய்திருக்கிறது, கிரேட்டர் நொய்டா வீடுகள் மற்றும் சில்லறை விற்பனை துறைகளில் மிகவும் வலுவான அடிப்படை தேவை கொண்டுவரும் என எதிபார்க்கபடுகிறது .

Thursday 31 May 2012

இந்திரபுரம் ரியல் எஸ்டேட்டில் வளர்ச்சி


இந்திரபுரம் உத்தர பிரதேசத்தில் மிக சமீபத்தில் உருவாக்கப்பட்ட பகுதியாகும். பிரபலமான மைல்கல் "காலா பத்தர்" இங்கு அமைந்துள்ளது.  இந்திரபுரம் மிக நன்கு திட்டமிடப்பட்ட பகுதிகளில் ஒன்றாகும். இந்திரபுரம் தில்லி மற்றும் நொய்டா ஆகிய நகரங்களின் நெருக்கம் காரணமாக மக்கள் இங்கு சொத்து வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். எனவே, இங்கு ரியல் எஸ்டேட் வளர்ச்சி உயர்ந்து காணபடுகிறது.


இந்திரபுரம் கவர்ச்சியான முன்னேற்றங்கள் மற்றும் முக்கிய காரணங்களில் ஒன்று போக்குவரத்து வசதி சாலைகள் மற்றும் மெட்ரோ ரயில் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் 25 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இங்கு கோவில்கள் வணிக நிறுவனங்கள் தொழிற்சாலைகள் நிறைந்து காணப்படுவது இங்கு வீடு வாங்க முக்கிய காரணம் ஆகும்.

சவரன் ஜெயந்தி பார்க் அது இந்திரபுரத்தில் அமைந்துள்ளது. பள்ளிகள் சர்வதேச பள்ளி, தில்லி பப்ளிக் பள்ளி, கேம்பிரிட்ஜ் பள்ளி JKG இந்திரபுரம் பப்ளிக் பள்ளி, மற்றும் பல மருத்துவமனைகள் அவந்திகா மருத்துவமனை, சாந்தி கோபால் மருத்துவமனை, JS & S Multispeciality  மருத்துவம் மற்றும் பகுப்பாய்வு மையம், ஃபோர்டிஸ் மருத்துவமனை, பிரகாஷ் மருத்துவ மையம் போன்றவை உள் அடங்கும் வசதி மிக்க பகுதிகளில் இந்திரபுரம் ஒன்று

Wednesday 23 May 2012

டெல்லியில் வீட்டுமனை முதலீடு அதிகரித்துள்ளது

டெல்லி , இந்தியாவின் தலைநகரம், அத்துடன் உலகின் மிக பெரிய நகரங்களில் ஒன்றாகும். டெல்லி நகரம் வீட்டுமனை முதலீடு செய்வதற்கு சிறந்ததது, இது குடியிருப்பு மற்றும் வர்த்தக வளர்ச்சியை காணபடுவதால், பல நிறுவனம் குர்க்கான் மற்றும் நொய்டா போன்ற இடங்களில் வீடு கட்ட திட்டங்களை மேற்கொள்வதன் மூலம் டெல்லியில் வீடு வாங்க மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.


மேலும் IT பிரிவுகள், போக்குவரத்து வசதிகள், வணிக வளாகங்கள், தொழில்துறை வளர்ச்சி போன்ற காரணிகளால் ரியல் எஸ்டேட் தொழில் துறை வெற்றிக்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்று. வாங்குவது விற்பது ரியல் எஸ்டேட், முதலீட்டில் ஒரு வடிவத்தை தந்துள்ளது.


• மெட்ரோ வசதிகள், வணிக வளாகங்கள், பொழுதுபோக்கு மையமாகவும், வரலாற்று நினைவு சின்னங்கள் டெல்லி சொத்து தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் வீட்டு கடன் எளிதாக கிடைக்க கூடியதாக இருப்பதால் நடுத்தர வர்க்க மக்கள் தங்கள் கனவுகளை இல்லத்தை நிறைவேற்ற உதவுகின்றது.


• வெளிநாடுவாழ் இந்தியர் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அவர்களின் ஆடம்பர குடியிருப்பு, அடுக்கு மாடி குடியிருப்பு, வில்லாக்கள், போன்றவை டெல்லியில் வாங்க விரும்புகின்றனர்.

• குடியிருப்பு தேவையான அனைத்து வசதிகள் கொண்ட 3BHK சுமார் 50-75 லட்சத்தில் கிடைகின்றன.

• டெல்லி சுற்றி பல இடத்தில் 1-2BHK குடியிருப்பு 25-35 லட்சத்தில் கிடைகின்றன . வளர்ந்து வரும் பன்னாட்டு நிறுவனங்கள் கூட டெல்லி ரியல் எஸ்டேட் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகின்றன.

• வர்த்தக குடியிருப்பு மற்றும் வணிக பண்புகள் நோக்கி மேலும் மேலும் மக்கள் ஈர்ப்பதில் டெல்லி முதலிடம் வகிக்கின்றது. டெல்லி வீட்டுமனை முதலீடு மிக வேகமான விகிதத்தில் அதிகரித்து வருகிறது.

Sunday 20 May 2012

தில்லி சொத்து தேவை அதிகரித்து உள்ளது

டெல்லி உள்ள உள்கட்டமைப்புகள் ஐந்து ஆண்டுகளில் மேம்பட்டுள்ளது. அன்னிய நேரடி முதலீடு மற்றும் வெளிநாட்டு நேரடி முதலீடு வருகைக்கு டெல்லி ரியல் எஸ்டேட் துறை வளர்ந்து வரும் காரணிகளில் ஒன்றாக காணப்படுகின்றது. 


டெல்லி  ரியல் எஸ்டேட் குறித்து உள்கட்டமைப்பு கூட ரு மேல் நோக்கிய அசைவாட்டம் கண்டுள்ளது. சொத்து விலை மீண்டும் அதிகரிக்க துடைங்கிவிட்டது. மேலும் வடிவமைப்பாளர்கள் மற்றும் அடுக்கு மாடி கட்டமைப்பளர்கள் இலாபம் ஈட்ட இன்னும் வீடுகள் மற்றும் குடியிருப்புகள் கட்ட ஆர்வமாக உள்ளனர். பல மக்கள்  முதலீட்டு நோக்கத்திற்காக  டெல்லி உள்ள சொத்துக்களை வாங்குகின்றனர்.


டெல்லி , ரியல் எஸ்டேட் முதலீடு மிகவும் பயனுள்ளவை என கருதபடுகிறது,
மற்றும் கடந்த ஐந்து ஆண்டு மேலாக தொடர்ந்து நாட்டின் மிக உயர்ந்த வருமானத்தை ஈட்டி கொடுத்து வருகிறது. இதன் காரணமாக டெல்லி சொத்து தேவை அதிகரித்து உள்ளது.

Sunday 6 May 2012

ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யலாம்.


ரியல் எஸ்டேட்டில் (Delhi Real Estateமுதலீடு செய்வது லாபகரமானது. ப்ளாட்டுகளின் விலை இப்போது உயர்ந்து கொண்டிருக்கிறது.

மக்களின் குடியிருப்புக்கான தேவைகளை தாண்டி ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்ய மக்களிடையே ஆர்வம் அதிகரித்து காணப்படுகிறது. தொடர்ந்து உங்களுக்கு மாத வருமானம் வரவேண்டுமென்றால் ப்ளாட்டிலும், நீண்டகால முதலீடு என்றால் வீட்டு மனைலும் முதலீடு செய்யலாம். ப்ளாட்டுகளில் செய்யும் முதலீடு அதிக வருமானம் ஈட்ட கூடியதாக உள்ளது .

வீடு அல்லது ப்ளாட்டாக வாங்கும் போது அந்த ப்ரமோட்டர்கள் (Builders in Delhi) முன் அனுபவம் உள்ளவர்களா என பார்பதும் ,சொன்ன தேதியில் கட்டி முடிப்பார்களா ? எனத் தெரிந்து முதலீடு செய்வது நல்லது. எனவே பில்டர்களின் முன் அனுபவமும் மிக முக்கியமாக கருதப்படுகிறது.

(Property) இடத்தை வாங்கும்போது பலரும் குடியிருப்பின் சிறப்பம்சங்களாக ஜிம், ஸ்விம்மிங் க்ளப், கார்பார்க்கிங் உள்ள இடத்தை தான் விரும்புகின்றனர்.
நகரின் சில இடங்களிலும் நல்ல வீடுகள் சரியான விலைக்கு, தரமான தனியார் நிறுவனதால் கட்டித்தரப்படுகிறது. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம். சரியான உங்கள் கனவு இல்லத்தை property.sulekha.com ல் அமைத்துக் கொள்வதுதான். நன்றி !

Friday 4 May 2012

புது டெல்லி நகரின் முக்கிய பகுதிகளில் மலிவு விலையில் குடியிருப்பு திட்டங்கள்


புது டெல்லி: நகரின் ரியல் எஸ்டேட் சந்தையில் வீட்டு தேவை காரணமாக ரூ 25-45 லட்சதுக்கு 3-4 படுக்கையறை குடியிருப்புகள் வேண்டும் போல் தோன்றுகிறது.

டெல்லி - போன்ற நகரத்தில் குடியிருப்புகள், மனை, (villas) வில்லாக்கள் மற்றும் penthouses என்.சி. மற்றும் காஸியாபாத் பல்வேறு பகுதிகளில் குறைவான விலையில் குடியிருப்புகள் கிடைக்கின்றன. இந்த வகையான குடியிருப்புகள் பெரும்பாலும் தனியார் அடுக்கு மாடி மற்றும் உருவாக்குனர்கள் கட்டபடுவதால், பொருளாதார சந்தையின் வளர்ச்சி அடைத்து வருகிறது.
பல்வேறு வசதிகள் உடைய குர்க்கான்,காஸியாபாத் (Property in Ghaziabadதவிர பல இடங்களிலும், இது போன்ற திட்டங்கள் டிஎல்எஃப், சுபெர்தஎச் போன்ற டெவலப்பர்களால் கட்டப்பட்டு வருகின்றன. டெல்லி குடியிருப்புகள் (Builders in Delhi) தனியார் நிறுவன அடுக்கு மாடிகள் விலை குறைவுக்கு இதுவும் ஒரு காரணம்.

ரியல் எஸ்டேட்: (Delhi Real Estate)புது டெல்லி வேகமாக நாட்டின் வர்த்தக மையமாக பெருகி வருகிறது .

பல IT,ITES, சிறப்பு பொருளாதார மண்டலம், அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் இதில் ரியல் எஸ்டேட் சந்தை upsurges தேவை காரணமாக நகரில் தேவை தெரிகிறது. ஆனால் வீடுகள் அதிக விலை காரணமாக , ஒரு பொருளாதார சரிவு எதிர்கொள்கிறது. இதனால், ரியல் எஸ்டேட் சந்தையை அதிகரிக்க பொருட்டு பல்வேறு திட்டங்கள் வீடுகள் மலிவு விலையில் இருக்க வேண்டும் என்ற காரணத்தால் டெல்லி தனியார் வடிவமைப்பாளர்கள் பல திட்டங்கள் வகுத்து வருகின்றன .

டெல்லி ரியல் எஸ்டேட் தேவை அதிகரிப்பு காரணமாக ஒரு முறை சொத்து வாங்கி வைத்தால்; விலை உயர்வு ஏற்படும் போது பின்னர் விற்க மிகவும் இலாபகரமாக இருக்கும். எனவே, இப்போது சந்தையில் மலிவாக இருக்கும் போது வீடுகள் வாங்க இதுதான் சரியான தருணம் ஆகும்.மேலும்(Property) வாங்க.
Blogger Wordpress Gadgets Twitter Bird Gadget